Sunday, November 7, 2010

கேரளாஅடுக்கு பிரியாணி

கேரளாஅடுக்கு பிரியாணி

1 பாஸ்மதி அரிசி (ஒரு கிலோ )
2 .கோழி அல்லது ஆட்டுக்கறி (ஒரு கிலோ )
3 .டால்டா (250 கிராம் )
4 .முந்திரி .அன்டிப்பருப்பு (இரண்டும் சேர்த்து 100 கிராம் )
5 மல்லி மற்றும் புதினா இல்லை (தேவையான அளவு )
6 .பெரிய வெங்காயம் (ஒரு கிலோ )
7 .தக்காளி (அரைக்கிலோ )
8 .பச்சமிளகா (10 எண்ணம் )
9 இஞ்சி மற்றும் பூண்டு (100 கிராம் )
10 .சமையல் ஆயில் (100 கிராம்)
11 தயிர் (100 கிராம்)
12 பிரியாணி மசாலா (50 கிராம் )
13 .அண்ணாச்சி பழம் (250 கிராம்)
14 .மஞ்சள் தூள் (ஒரு சிறு அளவு )
15 .உப்பு
16 .கொஞ்சம் பட்டை ,கிராம்பு ,ஏலக்கா
17 .பிரியாணி (வாசனைத் திரவியம் )
18 .பிரியாணி ( கலர் போடி )

பிரியாணி செய்யும் முன் சில தயார் செய்யவேண்டியவை
பாஸ்மதி அரிசியுடன் பட்டை, ஏலக்கா மற்றும் கிராம்பு இட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் அரை வேக்காட்டில் வடித்து வைக்கவும்
முந்திரி ,அன்டிப்பருப்பு ,மற்றும் சிறிது நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் எண்ணையில் முறுவலாக வதக்கி தனியாக வைக்கவும்
மல்லி மற்றும் புதினாவை சிறிதாக நறுக்கி வைக்கவும்
இஞ்சி .மற்றும் பூண்டை நன்றாக அரைத்து தனியாக வைக்கவும்
அண்ணாச்சி பழத்தையும் சிறிதாத நறுக்கி வைக்கவும்
டால்டாவை சூடில் இளகியபடி வைக்கவும்

இப்போது பிரியாணி செய்யலாம் வாங்க .....
அடுப்பை பத்தவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும் அதில் சமையல் எண்ணையை ஊற்றவும் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போடவும் வெங்காயம் நாற்றாக வதங்கிய உடன் பச்ச மிளகாவை போடவும் மீண்டும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் பொடியை போடவும் பிறகு நறுக்கி கழுவி வைத்த இறைச்சியை பொட்டு நன்றாக இளக்கவும்
இறைச்சி வெங்காயத்துடன் வதங்கி வரும் தருவாயில் நறுக்கிய தக்காளியை போடவும் பிறகு
அரைத்த இஞ்சி ,பூண்டை போடவும் பிறகுசிறிது உப்பிட்டு நன்றாக இளக்கவும் பிறகு பிரியாணி மசாலாவை பொட்டு மீண்டும் நன்றாக இளக்கவும்பிறகு சிறிதுதயிரை ஊற்றவும் ,பிறகு மசாலாவும் இறைச்சியும் ஒன்று சேர்ந்து வெந்தவுடன் அதை இறக்கி வைக்கவும் (பிரியாணி மசாலா ரெடி )

ஒரு காலியான பெரிய பாத்திரத்தை எடுக்கவும் அதில் முதலில் இறைச்சி மசாலாவின் கொஞ்சப் பகுதியை போடவும் பிறகு வடித்த பாஸ்மதி சோற்றின் அரைப்பங்கை போடவும் அதை மேலோட்டமாக சமப்படுத்தவும் பிறகு பிரியாணி கலர் பொடியை சிறுது தண்ணீரில் கலக்கி அதன் மேல் சிறிதாய் தொளிக்கவும் பிறகு மல்லி ,புதினா ,மற்றும் முந்திரி ,அன்டிப்பருப்பு .வாக்கிய வெங்காயம் .மற்றும் அண்ணாச்சி பழத்தையும் பொட்டு பிறகு இளகிய அரை டால்டாவை சுற்றி ஊற்றவும் பிறகு இரண்டாம் நிலைக்கு வந்து மீதியுள்ள மசாலா சோர் மற்றும் எல்லாப்பொருட்களையும் முதலில் செய்த போல் மறுபடியும் செய்யவும்
இறுதியாக பிரியாணி வாசனை திரவியத்தை எல்லா பக்கமும் தொளிக்கவும் பிறகு
ஒரு நல்ல மூடியிட்டு மூடி அவ்பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சிறிய அளவு தீ இடவும்
5 நிமிடத்திற்கு பிறகு வாசனைத்திரவியம் சூடாக்கி வாசம் வந்தவுடன் தீயை அணைக்கவும்
அரை மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து ஒரு பாகமாக கரண்டியால் பிரியாணியை எடுத்து
சாப்பிடும் பாத்திரத்தில் பரிமாறவும்
மிளகாவின் காரமும் ,தயிரின் புளியும் ,அண்ணாச்சி பழத்தின் இனிப்பும் கலந்த
சுவையான அடுக்கு கேரளா பிரியாணி ரெடி .....
செய்து, உண்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்

அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி


http://tamil2friends.com/node/27744

Tuesday, November 2, 2010

யுகாதிப் பச்சடி

சித்திரை மாசம் தமிழ் வருஷப் பிறப்பு அன்று செய்வது.

மாங்காய்ப் பச்சடி - வேப்பம்பூப் பச்சடி என்றும் சொல்லலாம்.
பச்சை மாங்காய் – 1 நல்ல நெத்து மாங்காயாக பார்த்து வாங்க வேண்டும்.
தேங்காய் – கால் மூடி அளவுக்கு
பாகு வெல்லம் – அரை உருண்டை அளவுக்கு உடைத்துக் கொள்ளவும்
புளி – ஆள் காட்டி விரல் நீளம் உள்ள அளவுக்கு - ஊற வைத்துக் கொள்ளவும்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் - ஒரு மணிநேரம் ஊறியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய் பொடி – 1 சிட்டிகை
வேப்பம்பூ - இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு

* தேங்காயை சின்னச் சின்னதாக (பேல்பூரி சாட் அல்லது சுண்டலுக்கு போடுவது போல நறுக்கிக் கொள்ளவும்.
* மாங்காயை தோல் சீவி விட்டு தொக்குக்கு (ஊறுகாய்) துருவுவது போல துருவியோ / மிக்சியில் ஒரு சுற்று அரைத்து தூளாக்கியது போலவோ செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பாகு வெல்லத்தை சீவிக் கொண்டு, ஏலம் சேர்த்து, ஒரு பால் கரண்டி அளவு தண்ணீரில் கரைத்து அடி கனமான வாணலியில் அரைப் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வரவேண்டும். வாணலி சூட்டிலேயே இன்னும் கொஞ்சம் கெட்டியாகி விடும் என்பதால் இந்தப் பதத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
* வேறு வாணலியில் (இன்டாலியம் அல்லது இரும்பு) சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுங்கள். வேப்பம் பூ நன்றாக வறுபடும் போது நமக்கு தொண்டையில் ஒரு கசப்பு ஏற்படும். இதை அப்படியே வெல்லத்தில் போடுங்கள்.
* இந்த வாணலியிலேயே, ஒரு முறை அலம்பி விட்டு, இரண்டு பால் கரண்டி தண்ணீர் விட்டு கடலை பருப்பை வேக விட்டுக் கொள்ளவும். கடலைப் பருப்பு முக்கால்வாசி வெந்ததும் மாங்காய் தேங்காயை போட்டு நீர் வற்றும் வரை, கருகாமல் பார்த்து வதக்கவும்.
* தண்ணீர் சுண்டியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, உப்பு, மிளகாய்ப் பொடி, வேப்பம் பூ எல்லாவற்றையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கி விடவும்.
* வெல்லப் பாகை லேசாக சூடு பண்ணிக் கொண்டு, பாகில் மாங்காய் தேங்காய் வேப்பம்பூ கலவையை சேர்த்தும், இரண்டு நிமிடம் கொத்திக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். கனமான வாணலி என்பதால் பாத்திர சூட்டிலேயே இறுகிக் கொள்ளும். அதனால் வெகு நேரம் வெல்லத்தை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.
* கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.

அங்காயப் பொடி

ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது. தேவையான அளவு அரைத்து ஜிப் லாக்கில் போட்டு freeze செய்தால் கண்டிப்பாய் ஆறு மாதம் வரை வரும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போட்டு, நல்லெண்ணையை காய்ச்சி ஊற்றிக் கொண்டு, (விரலை சுட்டுக்கொள்ளாமல்) கலந்து சாப்பிட்டால், வயிற்றுக்கு நல்லது. ஜுரத்தால் அல்லது நீண்ட விமான/ரயில் பயணத்தால், வாயில் கசப்பான உணர்வு இருக்குமே, அப்போது சாப்பாடு எதுவும் வாய்க்கு ருசிக்காது. இந்த பொடிசாதம் அப்போது அருமையாக இருக்கும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சுட்ட அரிசி அப்பளம் அருமையாக இருக்கும்.

கீழே உள்ள அளவுக்கு ஒருவர் தினமும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு (சாத்தில் கலந்து) சாப்பிட்டால் பதினைந்து நாட்கள் வரை வரும்.

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
சுண்டைக்காய் - 100 கிராம்
வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு (உலர்ந்தது)
மணத்தக்காளி - 100 கிராம்
சுக்கு - சுண்டு விரல் நீளம் ஒரு துண்டு
அல்லது எவரெஸ்ட் பிராண்ட் சுக்கு பொடி - மூன்று டீஸ்பூன்
மிளகு - எண்ணிக்கையில் 21
ஜீரகம் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

அடிகனமான வாணலியை அடுப்பில் வைக்கும் முன், நல்லெண்ணெய் சிறிது விரலில் தொட்டுக் கொண்டு வாணலியில் தடவி விட்டு, சூடான பின் சுண்டைக்காயை போட்டு நன்றாக கலகலவென்று (அப்டியே சப்தம் கேட்கும்) வறுத்துக் கொள்ளுங்கள். தட்டில் போட்டு ஆற விடுங்கள்.

கருவேப்பிலையை நன்றாக அலசிக் கொண்டு, துண்டில் போட்டு நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சுண்டைக்காய் மாதிரியே கல கலவென்று சத்தம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

வேப்பம் பூ, பின் மணத்தக்காளி, பின் மிளகு, அப்புறம் ஜீரகம் என்று தனித் தனியாக அதே வாணலியில் வறுத்து தனித் தனியாகவே ஆற விடுங்கள். கல் உப்பையும் அடுப்பை அணைத்த பிறகு வாணலியில் போட்டு வைத்தால் வாணலி சூட்டிலேயே காய்ந்து கொண்டு ஈரம் இல்லாமல் இருக்கும்.

கல் உப்பையும் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் தனித்தனியா மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக் கொண்டு கடைசியில் ஒன்றாகக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

நன்றி - வித்யாஸ் கிச்சன்

Tuesday, October 26, 2010

புதினா சாதம்


தேவையானவை

வடித்த சாதம் - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப


அரைக்க
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் – 2
இஞ்ஞி - 1 சின்ன துண்டு
லெமன் ஜூஸ் - ½ தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
மிளகாய் வற்றல் - 1
பெருங்காய தூள் - ¼ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து
நல்ல பச்சை வாசனை போக வதக்கவும்.
வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும்.
லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து
கிளறி விட்டு இறக்கவும்.
நல்ல சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
விரும்பினால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி
சேர்க்கலாம்.

Sunday, October 24, 2010

பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 100 கிராம்
பட்டாணிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 40
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறியது
கிராம்பு - 2
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 3
இஞ்சி - கொஞ்சம்
கசகசா - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. துவரம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
2. சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
4. தேங்காயில் பாதியை சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
5. மீதம் உள்ள தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
6. 2 பருப்பையும் அரைத்துக் கொள்ளவும்.
7. பட்டை, கிராம்பு, இஞ்சி, வர மிளகாய் அரைத்துப் பருப்புடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
8. பாதி வெங்காயம், கறிவேப்பிலை பாதி, உப்புச் சேர்த்து அத்துடன் பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
9. அடுப்பின் மீது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
10. மீதம் உள்ள வெங்காயம், பூண்டு போட்டுப் பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
11. உப்பு, புளி கரைத்த தண்ணீருடன் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த தேங்காய் விழுதை அதில் கரைக்கவும். அதில் மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
12. கொதிக்கும் போது வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டுக் கொஞ்சம் கெட்டியானதும் கொத்துமல்லித் தழை கொஞ்சம் போட்டு இறக்கவும்.

Friday, October 22, 2010




தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

Sunday, October 10, 2010

சுண்டைக்காய் வத்தக்குழம்பு


தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:

சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்

Friday, September 24, 2010

கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி- 400 கிராம்.
* பால்- 2 லிட்டர்
* கற்கண்டு- 1 கிலோ (பொடி செய்து கொள்ளவும்)
* நெய்- 150 மில்லி கிராம்.
* முந்திரிப் பருப்பு- 20 எண்ணம்.
* கிஸ்மிஸ்பழம்- 20 எண்ணம்.
* ஏலக்காய்- 5 எண்ணம்.
* தேங்காய்- பாதியளவு.

செய்முறை:

1. பச்சரிசியை அதைப் போல் மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாகக் குழைய விடவும்.
2. அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும்.
3. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும்.
4. இந்த வதக்கல் அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
5. பொடி செய்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும்.
6. கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும்.

காஞ்சிபுரம் இட்லி


தேவையான பொருட்கள் :


புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை


தாளிக்க தேவையான பொருட்கள் :


கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு


செய்முறை :

1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.

வெஜிடபிள் வடை

தேவையான பொருட்கள்:

* உளுந்தம் பருப்பு - 500 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (உரித்தது)
* மிளகாய் - 6 எண்ணம்
* காரட் - 50 கிராம் (துருவியது)
* கோஸ் - 50 கிராம் (துருவியது)
* பீட்ரூட் - 50 கிராம் (துருவியது)
* இஞ்சி - சிறிது
* கருவேப்பிலை - சிறிது
* மல்லித்தழை - சிறிது
* உப்பு - தேவையான அளவு
* ந.எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

1. உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைத்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைக்கவும்.
2. இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
3. அரைத்த மாவுடன் துருவி வைத்த காரட், கோஸ், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் நறுக்கி வைத்த இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துப் பிசையவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

Monday, September 6, 2010

சேமியா உப்புமா



தேவையானவை:

சேமியா உடைத்தது 2 கப்
வெங்காயம் 1
காரட் 2
குடமிளகாய் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் & உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,முந்திரிபருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,தேங்காய் துருவல்.

செய்முறை:

வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உருக்கி உடைத்த சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வெங்காயம்,காரட்,குடமிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு 10 கப் தண்ணீருடன் சிறிது உப்பு,சிறிது எண்ணைய் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த சேமியாவைபோட்டு கிளற் வேண்டும்.சேமியா வெந்தவுடன் வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை விட்டு இரண்டு நிமிடம் கழித்து அதனையும் வடிகட்டவேண்டும்.(இப்படி செய்வதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்)

வாணலியில் எண்ணைய் விட்டு தளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி அதனுடன் பொடியாக நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவேண்டும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தக்காளியை போட்டு வதக்கவேண்டும்.பின்னர் வடிகட்டிய சேமியாவை சிறிது உப்பு,பெருங்காயத்தூள்சேர்த்து காய்கறிக்கலவையில் கல்ந்து கிளற வேண்டும்.இறக்கிய பின் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையையும்,தேங்காய் துருவலையும் தூவி அலங்கரிக்கவேண்டும்.

சேமியா பாயசம்

சேமியா பாயசம்

தேவையானவை:

சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்

செய்முறை:

சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும். சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும். அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
------
இப்பொழுது கடைகளில் roasted சேமியா கிடைக்கிறது.அதை வறுக்கவேண்டாம்

Friday, September 3, 2010

குலாப் ஜாமுன் - gulab jamun




தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில் மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து பாகை வடிகட்டவும். வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால் ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும். brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம். (நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல் இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)